இந்தியாவில் 27 ஆயிரத்தை கடந்த கொரோனா பலி எண்ணிக்கை!

இந்தியாவில் 27 ஆயிரத்தை கடந்த கொரோனா பலி எண்ணிக்கை.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து  பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.  இதுவரை இந்த கொரோனா வைரஸால்,  உலக அளவில்,  14,640,326 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 608,854 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்,  8,730,348 குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில், முதல் மூன்று இடத்தில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உள்ள நிலையில், இந்தியாவில், 1,118,107 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  27,503 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை,  700,399 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் இந்த வைரஸ் பாதிப்பால், 1,70,693 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,481 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.