#BREAKING: தமிழகத்தில் 3-வது நாளாக 4 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு.!

தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,943 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் இன்று 3,943 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 90,167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று 2,325 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 50,054 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 2,393 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  58,327 ஆக அதிகரித்துள்ளது.

இதனால், தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,201 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 87 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

author avatar
murugan