ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி!

உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் கொஞ்சம் கூட தனது வீரியத்தை குறைத்து கொள்ளாமல் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை உலகம் முழுவதும் 12,378,854 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 556,601 பேர் உயிரிழந்துள்ளனர், 7,182,395 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் புதிதாக 222,825 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரே நாளில் 5,404 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனையில் 4,639,858 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

author avatar
Rebekal