தவான், ஸ்ரேயாஸ் மற்றும் ருதுராஜ் ஆகியோருக்கு கொரோனா..?

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்னதாக ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு கொரோனா உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டித் தொடருக்கு முன்னதாக மிக மோசமான செய்தி வெளியாகியுள்ளது. முதல் ஆர்டி-பிசிஆர் சோதனையில்  இந்தியா அணியின் அனைத்து வீரர்களும் நெகடிவ் வந்ததாகவும் இன்று நடைபெற்ற சோதனையில் மூத்த தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், ரிசர்வ் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டர் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய மூன்று வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா உறுதியானால் இந்த மூன்று வீரர்களும் ஒரு வாரம் தனிமையில் இருக்க வேண்டும்.   பிசிசிஐயின் மருத்துவக் குழு இந்த விஷயத்தை ஆராய்ந்து வருகிறது. இந்த செய்தி உறுதியானால் அவர்களுக்குப் பதிலாக புதிய வீரர்களின் பெயர்களை பிசிசிஐ விரைவில் அறிவிக்கும்.  இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான ஒருநாள் தொடர் பிப்ரவரி 6-ம் தேதி தொடங்குகிறது.

author avatar
Castro Murugan