மேலும் 4 பஞ்சாப் எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா – மொத்த எண்ணிக்கை 33 ஆக உயர்வு!

பஞ்சாபில் மேலும் நான்கு எம்எல்ஏக்களுக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியா முழுவதும் தீவிரம் அடைந்து கொண்டே செல்லும் நிலையில், அதிக அளவில் முன் களப்பணியாளர்களாக பணியாற்றக்கூடிய அமைச்சர்கள் மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தான் இதன் பாதிப்பு தீவிரமாக உள்ளது.

இந்நிலையில் பஞ்சாபில் கொரானா வைரஸ் தொடர்ந்து எம்எல்ஏக்களுக்கு பரவி வருகிறது. ஏற்கனவே 29 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும்  4 எம்எல்ஏக்களுக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.

author avatar
Rebekal