கேரளாவில் இன்று 3,026 பேருக்கு கொரோனா..1,862 பேர் குணமடைந்தனர்.!

கேரளாவில் ஒரே நாளில் 3,026 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் இன்று ஒரே நாளில் 3,026 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இன்று 13 பேர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்ததால் இதுவரை கொரோனாவால் 372 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், 23,217 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவிலிருந்து இன்று 1,862 பேர் குணமடைந்தனர். இதுவரை 68,863 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார்கள் என கேரள சுகாதாரதுறை மையம் தெரிவித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.