டெல்லியில் ஒரே நாளில் 1,840 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது!

டெல்லியில் மேலும் 1,840 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வரும் நிலையில், கடந்த மூன்று நாட்களாக அதிகரிக்க தொடங்கியது. அந்தவகையில், இன்று ஒரே நாளில் 1,840 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,67,604 ஆக உயர்ந்துள்ளது.

அதில் 22 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,369 ஆக உள்ளது. மேலும் 1,130 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு, வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,50,027 ஆக உயர்ந்துள்ளது.

அதுமட்டுமின்றி 13,208 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.