கொரோனா எதிரொலி.., கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு..!

கொரோனா காரணமாக செய்முறை மற்றும் எழுத்து தேர்வுகள் ஒத்திவைப்பதாக புதுச்சேரி பல்கலைகழகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நாள்தோறும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருவதால் புதுச்சேரி பல்கலைகழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் வரும் 19-ம் தேதி தொடங்க இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக செய்முறை மற்றும் எழுத்து தேர்வுகள் ஒத்திவைப்பதாக புதுச்சேரி பல்கலைகழகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்வுகள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொரோனா காரணமாக சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்தும், +2-ஆம் வகுப்பு தேர்வை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan