ராகுலின் பயணத்தை தடுக்கவே கொரோனா நாடகம் – கே.சி.வேணுகோபால்

கொரோனா பரவல் குறித்து காங்கிரஸ் கட்சியும் அக்கறை கொண்டுள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் பேச்சு.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை தடுக்கவே, கொரோனா நாடகத்தை பிரதமர் உருவாக்கி உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் கேசி வேணுகோபால் குற்றசாட்டியுள்ளார்.

கொரோனா பரவல் குறித்து காங்கிரஸ் கட்சியும் அக்கறை கொண்டுள்ளதாகவும், சீனாவில் இருந்து விமானங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. தேசிய அளவில் கொரோனா கட்டுப்பாடு எதுவும் அமலில் இல்லை எனவும் தெரிவித்தார். பொது கூட்டங்களில் பேசி வரும் பிரதமர் மோடிக்கு கொரோனா பற்றி எந்த கடிதமும் அனுப்பப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment