இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. பாதுகாப்பு நடவடிக்கையை அனைத்து நாடுகளும் தீவிரப்படுத்தி வருகின்றன. ஏறத்தாழ அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. 

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உலக அளவில் 14,31,973 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 82 ஆயிரத்தை தாண்டிவிட்டது. 

இந்த கொரோனா பீதியில் ஆறுதல் தரும் செய்தி என்னவென்றால் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடுதிரும்பியவர்கள் எண்ணிக்கை 3,02,209-ஆக உயர்ந்துள்ளது.  

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.