கோயம்பேட்டில் கொரோனா பாதிப்பு 8 ஆக உயர்வு..!

சென்னை கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்துவந்த அரியலூரை சார்ந்த கூலித் தொழிலாளிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கோயம்பேட்டில் ஏற்கனவே ஏழு பேர் பாதிக்கப்பட்ட நிலையில்,  தற்போது அங்கு  வேலை செய்து வந்த  அரியலூர் தொழிலாளிக்கும் கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கோயம்பேடு மார்க்கெட்டில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் சென்னையிலுள்ள கோயம்பேடு சந்தையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இவர், கடந்த 27 -ம் தேதி  தனது ஊருக்கு சென்று உள்ளார். பின்னர், சளி மற்றும் காய்ச்சல் காரணமாக அருகே உள்ள மருத்துவமனைக்கு இரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி உள்ளார்.இதனையடுத்து,  தற்பொழுது  அவருக்கு கொரோனா  பாசிட்டிவ்  என வந்துள்ளது. இதனால், நக்கம்பாடி கிராமத்தை சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 6 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 4 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan