ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பாவிற்கு கொரோனா உறுதி.!

ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பாவிற்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது.

டி-20 உலகக்கோப்பையில் சூப்பர்-12 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி, இன்று இலங்கை அணியுடன் பலப்பரிட்சை நடத்துகிறது. ஆஸ்திரேலியா தனது முதல் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இலங்கைக்கு எதிராக இன்றைய போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பாவிற்கு போட்டி தொடங்கும் 19 மணி நேரத்திற்கு முன்னதாக கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவருக்கு லேசான அறிகுறி இருந்ததையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதனால் ஆடம் ஜாம்பா இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் அவருக்கு பதிலாக ஆஷ்டன் ஏகர் விளையாட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
Muthu Kumar

Leave a Comment