எல்லை பாதுகாப்பு படையினரை தாக்கிய கொரோனா! 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

திரிபுராவில் 12 எல்லை பாதுகாப்பு படையினருக்கு கொரோனா தொற்று உறுதி.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கி வருகிறது. அந்த வகையில், இதுவரை உலக அளவில், 3,566,805 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 248,304 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவை பொறுத்தவரையில், 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், திரிபுராவில் நடைபெற்ற கொரோனா பரிசோதனையில், 12 எல்லை பாதுகாப்பு படையினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஏற்கனவே நேற்று 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், திரிபுராவில் மொத்தம் 14 எல்லை பாதுகாப்பு படையினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மொத்தம் 54 எல்லை பாதுகாப்பு படையினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.