புதுக்கோட்டை அருகே வேன் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்து…! உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது….!

புதுக்கோட்டை அருகே வேன் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 15 பேர் கோவிலுக்கு சென்று விட்டு வேனில் திரும்பி கொண்டிருந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நெடுஞ்சாலையில், வேன் மீது எதிரே வந்த கன்டெய்னர் லாரி மோதியது.
இந்த சம்பவத்தில்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக காவல்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment