“உல்லாசமாக இருக்கவேண்டுமா? தொடர்பு கொள்ளுங்கள்” காவலர் செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தி..!

மதுரையில் காவலராக பணிபுரிந்து வந்தவர், காவலர் பழனிக்குமார். இவரின் செல்பேசிக்கு பாலியல் செய்யும் கும்பல் சிலர், “உல்லாசமாக இருக்க தொடர்பு கொள்ளுங்கள்” என்ற குறுந்செய்தி வந்தது.

இதனையடுத்து, குறுந்செய்தி அனுப்பிய கும்பலை காவல் துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், அந்த செய்தியை அனுப்பிய ஒரு பெண் உட்பட நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளார்.

மேலும் இது குறித்து விசாரிக்கையில், பல ஆண்களுக்கு இந்த செய்தியை அனுப்பி, அவர்களிடம் உல்லாசமாக இருந்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டியதும் தெரியவந்துள்ளது.