சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு.. நிலைமை மோசமாக உள்ளது.! காங்கிரஸ் எம்எல்ஏ பரபரப்பு தகவல்.!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நாளுக்கு நாள் செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இதனால் அங்கு பக்தர்கள் தரிசன காத்திருப்பு நேரம் என்பது கூடிக்கொண்டே செல்கிறது. தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டாலும் பக்தர்கள் காத்திருப்பு நேரத்தை குறைக்க முடியவில்லை. இதனால் சபரிமலை செல்லும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.. சபரிமலையில் தரிசன நேரம் நீட்டிப்பு..!

சபரிமலை பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய கோட்டயம் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு சபரிமலை, நிலக்கல், பம்பை உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு சென்றது. அந்த ஆய்வு முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.  இதனை கட்டுப்படுத்த மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது என தெரிவித்தார்.

பம்பைவில், பக்தர்கள் தண்ணீர் அல்லது உணவு இல்லாமல் 8-9 மணி நேரம் வெயிலில் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர். இந்த நிலை செயற்கையாக உருவாக்கப்பட்டது. பம்பைவில் ஒரே நேரத்தில் 15,000 யாத்ரீகர்கள் தங்கும் வகையில் ஒரு ஓய்விடம் இருந்தது. இருப்பினும், இந்த வசதி 2018 வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தற்போது, இரண்டு சிறிய ஓய்வு இடங்கள் மட்டுமே உள்ளன.

நிலக்கல் பகுதியிலும் குழுவினர் ஆய்வ செய்தனர். குளிரூட்டிகள்(AC) இயக்கப்படாமல் 100 முதல் 150 பக்தர்கள் வரையில் பேருந்துகளில் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர். குழு பின்னர் பம்பையில் ஆய்வு கூட்டத்தை நடத்தியது.  அடிப்படை வசதிகள் இல்லாததால் பக்தர்கள் எதிர்கொள்ளும் கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க குழு முடிவு செய்யபட்டுள்ளது என்றும் காங்கிரஸ் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் கூறினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.