திருப்பூர் வரும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு கட்டாய கொரோனா தடுப்பூசி…!

திருப்பூருக்கு வரும் வெளிமாநில தொழிலாளர்கள் கொரோனா தடுப்பூசி போடாதவர்களாக இருந்தால் அவர்களுக்கு கட்டாய தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்திலும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வெளிமாநிலங்களில் இருந்து வேலைக்காக திருப்பூர் மாவட்டத்திற்கு வரக்கூடிய தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

கொரோனா நெகட்டிவ் என சான்றிதழ் வந்த பின்பே வெளிமாநில தொழிலாளர்கள் திருப்பூர் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் தற்போதும், கொரோனா மூன்றாம் அலையை பரவலை தடுக்கும் விதமாக ரயில் நிலையங்களில் வைத்தே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதுடன் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய நபர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்கிறார்களா என சோதனை செய்யப்பட்டு, செலுத்தாத பட்சத்தில் அங்கேயே அவர்களுக்கு கட்டாய தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.

author avatar
Rebekal