முழங்கை காயம்… மிஸ் ஆகி போன தங்கபதக்கம்.! வருத்தப்பட்ட பதக்க நாயகன் சங்கேத் சர்கார்.!

எனது முழங்கை காயம் காரணமாக வெள்ளிப்பதக்கம் தான் வெல்ல முடிந்தது என வருத்தத்துடன் சங்கேத் சர்கார் தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்தில் காமன்வெல்த் தடகள போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், 55 கிலோ எடைப்பிரிவில், சங்கேத் சர்கார் எனும் 22 வயது வீரர் பங்கேற்றார்.

அவர் இறுதிப்போட்டியில் மொத்தமாக 248 கிலோ எடை தூக்கி, வெளிப்பதக்கத்தை பெற்றார். காமன்வெல்த் போட்டியின் இந்தியாவின் முதல் பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார்.

இவருக்கு பிரதமர் மோடி உட்பட பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இது குறித்து, சங்கேத் சர்கார்  கூறுகையில், ‘ நான் கடந்த 4 வருடங்களாக தங்கம் வெல்ல தான் முயற்சித்தேன். ஆனால், கடுமையாக முயற்சித்தும், எனது முழங்கை காயம் காரணமாக வெள்ளிப்பதக்கம் தான் வெல்ல முடிந்தது என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment