தனியே வா, செக் பண்ணனும் – மருத்துவ ஊழியரை நம்பி சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

தனியே வா, செக் பண்ணனும் என கூறி அழைத்து சென்ற மருத்துவ ஊழியர் அங்கிருந்த மேலும் இருவருடன் அப்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

டெல்லியிலுள்ள ரோஹிணி எனும் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த தனது உறவினருக்கு துணையாக அந்த மருத்துவமனையிலேயே பெண் ஒருவர் இருந்துள்ளார். அப்பொழுது அந்த பெண் அங்கு தனியாக இருப்பதாய் கண்டா மருத்துவமனையின் ஊழியர் ஒருவர் யார் ஏன் இங்கு இருக்கிறீர்கள் என விசாரித்துள்ளார். அவர் தனிமையில் இன்னொருவரின் துணைக்காக இருப்பதாய் அறிந்த ஊழியர் அவரை உங்களை சோதனையிட வேண்டும் தனியாக வாருங்கள் என கூறி அழைத்து சென்றுள்ளார்.

மருத்துவமனை ஊழியர் என்பதால் அவரை நம்பிச்சென்ற அந்த பெண்ணை கார் பார்க்கிங் செய்யக்கூடிய இடாதாருகாமையில் வைத்து அவர் பாலியல் சீண்டல்கள் செய்துள்ளார். இதனால் சத்தமிட்டு பெண்ணை அங்கிருந்த மற்ற இரு ஊழியர்கள் கவனித்துள்ளனர். அதன் பின் மூவரும் சேர்ந்து அப்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்து அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் ம்,ஊவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
Rebekal