கோவை கிங்ஸ் அசத்தல் பந்துவீச்சு..! 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

டிஎன்பிஎல் தொடரில் இன்றைய LKK vs ITT போட்டியில், கோவை கிங்ஸ் அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

7-வது சீசன் டிஎன்பிஎல் தொடரின் இன்றைய போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் மற்றும் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் கோவையில் உள்ள எஸ்என்ஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. இதில் திருப்பூர் தமிழன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் களமிறங்கிய லைக்கா கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 180 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய துஷார் ரஹேஜா பொறுப்பாக விளையாடினார். இருந்தும் 33 ரன்கள் எடுத்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

அவரைத்தொடர்ந்து, களமிறங்கிய திருப்பூர் அணியின் வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து, அணிக்கு ஏமாற்றத்தை அளித்தனர். இறுதியில் புவனேஸ்வரன் ஆட்டமிழந்ததும், அணியானது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

முடிவில், திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவர்களில் 109 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் கோவை கிங்ஸ் அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக துஷார் ரஹேஜா மட்டுமே 33 ரன்கள் குவித்துள்ளார். கோவை கிங்ஸ் அணியில் ஷாருக் கான் 3 விக்கெட்டுகளையும், முகமது 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.