இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர்..!திண்டுக்கலில் புதிய மருத்துவக்கல்லூரி உதயம்!

புதிதாக அமைய உள்ள திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார். 

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். ரூ. 325 கோடி மதிப்பில் புதிய அரசு மருத்துவ கல்லூரி அமைக்க மத்திய அரசானது அனுமதி வழங்கியது.

இதனையடுத்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  அடியனூத்து கிராமத்தில் 8.61 ஹெக்டர் பரபரப்பளவில் இந்த மருத்துவ கல்லூரிக்கு நிலம் ஒதுக்கப்பட்ட நிலையில்  இன்று காலை நடைபெறும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கலில் புதியதாக உருவாகவுள்ள மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

author avatar
kavitha