தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தலைமை நீதிபதி அலுவலகம் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு  அளித்துள்ளது.
கடந்த 2010-ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் தகவல் அறியும் உரிமை சட்ட (RTI) வரம்பிற்குள் நாட்டின் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும் என்று தீர்ப்பளித்தது.
டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்ற செயலாளர் மற்றும் தகவல் தொடர்பு அதிகாரி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.இதில்  டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு செல்லும் என்று அறிவித்தது.அதாவது தகவல் அறியும் உரிமை சட்ட (RTI) வரம்பிற்குள் நாட்டின் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும் என்று தெரிவித்துள்ளது.