ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகியோருக்கு நிரந்தர குடியுரிமை வழங்க வகையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நேற்று மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். இம்மசோதாவை அறிமுகப்படுத்ததுவதா.? வேண்டாமா .? என வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதில் அதிமுக எம்.பிக்கள் உள்ளிட்ட 295 எம்பிக்கள் ஆதரவாகவும் , திமுக , காங்கிரஸை சார்ந்த 83 எம்பிக்கள் எதிராக வாக்களித்தனர். பின்னர் இது தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டது. இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாததை ஏற்றுக்கொள்ள முடியாது என எதிர்கட்சி எம்.பிக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தில் இருக்கும் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாதது ஏற்றுக்கொள்ள முடியாது என திமுக எம்.பிக்கள் பேசினர்.இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் அதிர் ரஞ்சன் சவுத்ரி, சவுக்கதா ராய் ஆகியோர் அரசியலமைப்பு சட்டம் வழங்கிய பல்வேறு சட்டங்களை மீறும் வகையில் இந்த மசோதா உள்ளது என்றும் மத அடிப்படையில் குடியுரிமை வழங்கும் முறையாக உள்ளது என எதிர்த்தனர்.
இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா மதரீதியாக நாட்டை பிளவுபடுத்தியது காங்கிரஸ் எனக்கூறினர். ஊடுருவல்காரர்களுக்கும் ,அகதிகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும். இந்த மசோதா எந்தவித பாகுபாடும் இல்லை, எந்த மதத்தினரின் உரிமையைப் பறிக்கும் வகையில் இல்லை எனக் கூறினார்.
மேலும் மன்மோகன் சிங் , அத்வானி ஆகியோர் பாகிஸ்தான் சார்ந்தவர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் முஸ்லிம்களுக்கு எதிராக 0.001 சதவிதம் கூட இந்த மசோதா இயற்றவில்லை என கூறினர்.
இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு நீண்ட நேரமாக அமித் ஷா பதிலளித்தார். குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அரசியல் சட்டத்துக்கு விரோதமாக இயற்றப்படவில்லை. நாட்டில் இருக்கும் இஸ்லாமியர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் என விளக்கம் அளித்தார்.
அமித் ஷாவின் விளக்கத்தை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் முன்வைத்த திருத்தங்கள் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இறுதியாக மசோதாவுக்கு ஆதரவாக 311 எம்.பிக்களும் , எதிராக 80 எம்.பிக்களும் வாக்களித்தனர்.இதை தொடர்ந்து மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
Manipur Violence : மணிப்பூரில் ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இரு பெண்கள் குறித்தும், அங்கு நேர்ந்த சம்பவங்கள் குறித்தும் CBI அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த…
Covishield: கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாகவே பக்க விளைவுகள் ஏற்படலாம் என அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பின்னர்…
Rohit Sharma : ரோஹித் சர்மா கிரிக்கெட்டிற்குள் நுழைந்த போது அவரிடம் பேசிய விஷயங்களை பற்றி கவுதம் கம்பீர் நினைவு கூர்ந்தார். இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன்…
BCCI : டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது பிசிசிஐ. ஐபிஎல் 2024 தொடர் நடைபெற்று வரும் நிலையில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு. ஐசிசியின் டி20 உலகக்கோப்பை…
Winner : தெலுங்கு சினிமாவை பழி வாங்க வின்னர் படத்தை காப்பி அடித்து எடுத்தேன் என சுந்தர் சி தெரிவித்துள்ளார். இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர்…