குடியுரிமை திருத்த சட்டம் : இலங்கை தமிழர்களை ஏன் சேர்க்கவில்லை ? சரத் பவார்

  • குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. 
  • இலங்கையில் இருந்து வரும் தமிழர்களை  ஏன் சேர்க்கவில்லை? என்று சரத் பவார் கேள்வி எழுப்பியுள்ளார். 

மத்திய அரசு நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றியது.குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்த விட்ட நிலையில் சட்டம் அமலுக்கு வந்தது.ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில் இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் கூறுகையில், நாட்டில் ஒற்றுமை வளர வேண்டும் என்று நினைப்பவர்களும் தான் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.குடியுரிமை சட்டம் மத்திய அரசின் சட்டமாக இருக்கலாம்.ஆனால் அதை நடைமுறைப்படுத்த வேண்டியது மாநில அரசுகள் தான். இதற்கு தேவையான வசதிகள் மாநிலங்களுக்கு உள்ளதா? என்பதை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.ஏன் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானில் இருந்து வருபவர்களுக்கு மட்டும் குடியுரிமை சட்டத்தில் அனுமதிக்கிறீர்கள்? இலங்கையில் இருந்து வரும் தமிழர்களை  ஏன் சேர்க்கவில்லை?  என்று கேள்வி எழுப்பியுள்ளார்.