வழக்கறிஞர்கள் காவல்துறையினர் மோதல்….31வழக்கறிஞர்களுக்கு C.B.I சம்மன்…!!

  • சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்த 2009_ஆம் ஆண்டு வழக்கறிஞர்களும் காவல்துறையினரும் மோதிக்கொண்டனர்.
  • இந்நிலையில் இதில் தொடர்புள்ள 31 பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்த 2009_ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி வழக்கறிஞர்களும் காவல்துறையினரும் மோதிக்கொண்ட வழக்கில் நீதிமன்ற முன்னாள் உயர்நீதிமன்ற முன்னாள் வழக்கறிஞர் சங்கத் தலைவர் கருப்பன் உள்ளிட்ட 32 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

இதை விசாரித்த சென்னை சிபிஐ நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட 32 பேரில் கருப்பன் இறந்துவிட்டதால் மீதமுள்ளவர்கள்  நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.  இந்த வழக்கில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன் உள்ளிட்ட 31 பேரும் வருகின்ற 28ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென்று சி.பி.ஐ  சம்மன் அனுப்பியுள்ளது. இந்த சம்மனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்  வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment