கொரோனாவை அடுத்து பிளேக் நோயால் சீனா பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம்!

கொரோனா வைரஸை அடுத்து சைனாவில் புபோனிக் பிளேக் நோய் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

உலகை ஆட்டிப் படைத்து வைத்துள்ள கொரோனா வைரஸ் சைனாவின் உகைன் பகுதியில் ஆரம்பமாகி தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகின்ற ஒரு கொடிய உயிர்க்கொல்லி வைரஸ் ஆக உள்ளது. இந்த வைரஸின் தாக்கம் இந்த வருடம் முழுவதுமே இருக்கும் என்று கூறப்படுகின்ற நிலையில், கோடிக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இதன் தாக்கமே இன்னும் குறையாத நிலையில் வட சைனாவில் உள்ள மங்கோலியா பகுதியில் ஒரு மருத்துவமனையில் புபோனிக் பிளேக் நோய் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது. இந்த வழக்கை உள்ளூர் சுகாதார ஆணையம் இணையத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.

author avatar
Rebekal