#BREAKING: அக்..,2-ல் கிராமசபை கூட்டத்தில் முதல்வர் பங்கேற்பு..!

அக்டோபர் 2-ம் தேதி மதுரை பாப்பாபட்டியில் நடைப்பெற கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் கலந்துக்கொள்கிறார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி என்பதால் அந்நாளில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாப்பட்டியில் நடைப்பெற உள்ள கிராம சபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொள்கிறார்.

author avatar
murugan