, ,

நிவாரண முகாமில் தங்கியுள்ள இருளர் மற்றும் பழங்குடியினர் இன மக்களுக்கு உணவு வழங்கிய முதல்வர்..!

By

மாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்கியுள்ள இருளர் மற்றும் பழங்குடியினர் இன மக்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உணவு பரிமாறியுள்ளார்.

செங்கல்பட்டு : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், பல மாவட்டங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கிய நிலையில், சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மேலும், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், மக்களின் இயல்புவாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளானது.

குறிப்பாக சென்னையில் மழையால் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார். அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பை ஆய்வு செய்த நிலையில், மாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்கியுள்ள இருளர் மற்றும் பழங்குடியினர் இன மக்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உணவு பரிமாறியுள்ளார்.

Dinasuvadu Media @2023