2 புதிய காவல் ஆணையரக அலுவலகங்களை தொடங்கி வைக்கும் முதல்வர்..!

தாம்பரம், ஆவடி ஆகிய இரண்டு புதிய காவல் ஆணையரக அலுவலகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆவடி மற்றும் தாம்பரம் புதிய காவல் ஆணையரகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார். நிர்வாக வசதிக்காக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகம், ஆவடி மாநகர காவல் ஆணையர் அலுவலகம் என 3 ஆக பிரித்து அரசாணையும் வெளிடப்பட்டது.

அதன்படி தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு சிறப்பு அதிகாரியாக கூடுதல் டிஜிபி ரவி, ஆவடி காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய காவல் ஆணையரகத்தை திறந்து வைக்கும்போது  தாம்பரம் கமிஷனராக கூடுதல் டிஜிபி ரவி, ஆவடி கமிஷனராக கூடுதல் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சிறப்பு அதிகாரியாக பதவியேற்கிறார்கள். இன்று முதல் தாம்பரம் மற்றும் ஆவடி என தனித்தனியாக போலீஸ் கமிஷனர் அலுவலகம் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan