முக்கிய அரசியல் புள்ளியின் மருமகன் மறைவு – முதல்வர் இரங்கல்!

தூத்துக்குடி:இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் எஸ்.அழகுமுத்து பாண்டியன் அவர்களின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ஐயா அவர்களின் மருமகனும்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளருமான எஸ்.அழகுமுத்து பாண்டியன் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.இதனையடுத்து,அவரது மறைவுக்கு சிபிஐ கட்சியினர் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கோவில்பட்டியில் இன்று மாலை 4 மணிக்கு மறைந்த எஸ்.அழகுமுத்து பாண்டியன் அவர்களின் இறுதி ஊர்வலம் நடைபெறுவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் எஸ்.அழகுமுத்து பாண்டியன் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்று அறிந்து மிகவும் வருந்தியதாகவும், கொள்கைப்பற்றுமிக்க தோழரை இழந்து வாடும் பொதுவுடைமை இயக்கத் தோழர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக,மருமகனை இழந்து தவிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஐயா நல்லகண்ணு அவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் தனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் கூறியுள்ளார்.