மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

கொரோனா வைரஸ் காரணமாக முதலில் ஏப்ரல் 14 -ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் பின்னர் ஊரடங்கு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.ஊரடங்கு முடிவடையுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் ஒரு சில மாநில முதலமைச்சர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பிரதமர் மோடி மே 3-ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பதா? வேண்டாமா? என்பதை அறிவிப்பதாக தெரிவித்திருந்தார் என்ற தகவல் வெளியாகியது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் சிகிச்சை முறைகளை வகுக்க அமைக்கப்பட்ட மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.