நாளை மறுநாள் கோவை செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி

கோவையில் கொரோனா பாதிப்பு, அத்திக்கடவு அவிநாசி திட்டம் குறித்து வரும் 25ஆம் தேதி முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்ய உள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ,நாளை மறுநாள் காலை 10 மணிக்கு கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ,அம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் ,கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் அத்திக்கடவு- அவிநாசி நீரேற்றும் திட்டப்பணிகளை நேரில் சென்று கள ஆய்வு செய்ய உள்ளார்கள்.

அதனை தொடர்ந்து 26-ஆம் தேதி அன்று காலை 10 மணிக்கு திருச்சி மாவட்ட  ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ,அம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் ,கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் முக்கொம்பு கதவனை கட்டும் பணிகளை ஆய்வு செய்யா உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.