அஸ்வினுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் தமிழக சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின்  500-வது விக்கெட்டை  எடுத்தார். இவர் இந்த சாதனையை  98-வது டெஸ்ட் போட்டியில் செய்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

அதே நேரத்தில் சர்வதேச அளவில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் அஸ்வின் 9-வது இடத்தில் உள்ளார்.  இந்திய அணியில் இதற்கு முன் முன்னாள் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்ததாக தற்போது அஸ்வின் உள்ளார்.

செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!

இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வினுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில்”சாதனைகளை முறியடித்து கனவுகளை செதுக்குகிறார். சென்னையின் சொந்தப் பையன் அஷ்வின், மாயாஜால சுழற்பந்து வீச்சில் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியதற்கு வாழ்த்துகள், மேலும் ஏராளமான விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிகளை குவிக்க வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

 

author avatar
murugan

Leave a Comment