போடுட விசில டெல்லியை வெட்டி வீசி,மும்பையை மூட்டைக்கட்ட நுழைந்தது சென்னை அணி ..!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில்  டெல்லிக்கு எதிரான 2வது தகுதிச்சுற்று போட்டியில் விசாகப்பட்டினத்தில் டாஸ் வென்ற  சென்னை அணி பந்துவீச  முடிவு செய்தது. டெல்லியை  20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் சேர்த்தது.பின்  சென்னை இலக்கை நோக்கி களமிறங்கியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஜோடி சிறப்பாக விளையாடியது டு பிளிசிஸ் தனது அரைசதத்தை பதிவு செய்தார். பின்னர் டெல்லி வீரர் கீமா பாலிடம் 50  ரன்னில் அவுட் ஆகினார்.

அதன் பின் வாட்சன் 50 ரன்னில் அமித் மிஸ்ராவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.மேலும் ரெய்னா 11 ரன்னில் அகஷ்யர் பட்டேல் பந்தில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.தோனி  7 ரன்னில் அவுட் ஆனார்.இறுதியாக சென்னை அணி 19 ஒவரில் 4 விக்கெட்டை இழந்து 151 ரன்கள் அடித்தது.இதன்மூலம்டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சென்னை மும்பை அணியோடு வரும் 12 தேதி இறுதி போட்டியில் மோதுகிறது.

 

 

author avatar
kavitha

Leave a Comment