#Breaking:இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

சென்னை:தமிழகத்தில் கடலூர்,விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,கடலூர்,விழுப்புரம்,ராணிப்பேட்டை,திருவாரூர்,தஞ்சை,நாகை,புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதைப்போல,புதுவையிலும் அடுத்து வரக்கூடிய 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.