சென்னை டெஸ்ட்… ஹிட்மேன் அரைசதம் விளாசல்..!

அதிரடியாக விளையாடி வரும் ரோஹித் 47 பந்தில் அரைசதம் விளாசினார்.

இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. இப்போட்டியில் டாஸ் இந்திய அணி கேப்டன் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் , சுப்மான் கில் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய 2-வது ஓவரிலே சுப்மான் கில் ரன் எடுக்கமால் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

பின்னர், புஜாரா களமிறங்க ரோஹித் உடன் கூட்டணி அமைத்து சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதிரடியாக விளையாடி வரும் ரோஹித் 47 பந்தில் அரைசதம் விளாசினார். அதில், 8 பவுண்டரி , 1 சிக்ஸர் விளாசினார். தற்போது களத்தில் ரோஹித் 51, புஜாரா 14 ரன்களுடன் விளையாடி வருகின்றனர். இந்திய அணி 17 ஓவர் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 67 ரன்கள் எடுத்துள்ளது.

author avatar
murugan