நாளை சென்னை மெட்ரோ ரயில் சேவை இரவு 11 மணி வரை நீட்டிப்பு.!

சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் இரவு 11 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்பட்டு வரும் நிலையில் பண்டிகை காலங்களை முன்னிட்டு ரயில்களை இரண்டு மணி நேரம் கூடுதலாக இயக்கவுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் தெரிவித்திருந்தது.

அதன்படி, அக்டோபர் 23 மற்றும் 24 ஆகிய தினங்களில் மெட்ரோ சேவை இரவு 11 மணி வரை இயக்கப்பட்டது. அது மட்டுமின்றி, விடுமுறையை கொண்டாடி விட்டு வீடு திரும்புவோரின் வசதிக்காக நேற்றைய தினம் ரயில்கள் காலை 9 மணிக்கு பதிலாக 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்பட்டது.

அதே நேரத்தில், பண்டிகை தினத்தையொட்டி நாளையும் மெட்ரோ ரயில்கள் இரவு 11 மணி வரை இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் நவம்பர் 2 ஆம் தேதி காலை 5.30 மணி முதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.