ஓபிசி குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்ள மத்திய அரசுக்கு என்ன தயக்கம்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை!

“ஓபிசி குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்ள மத்திய அரசுக்கு என்ன தயக்கம்?” என மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வியெழுப்பியுள்ளது.

மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பல இடங்களை இழந்துள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கு ஒருபுறம் நடக்க, மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஓபிசி குறித்தும் கணக்கெடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஓபிசி குறித்தும் கணக்கெடுக்க கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், ஓபிசி குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்ள மத்திய அரசுக்கு என்ன தயக்கம்? எனவும் கேள்வியெழுப்பியுள்ளது.