தற்போது சென்னை மெட்ரோ ரயில் பணியின் போது விபத்து… கட்டிடம் சரிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அரசு மெட்ரோ ரயில் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் பல்வேறு இடங்களில் பணிகள் முடிந்து செயல்பாட்டுக்கு வந்த நிலையில் சில இடங்களில் மட்டும் பணிகள் நடைபெற்று வந்தது.  இந்நிலையில்,   சென்னை தண்டையார்பேட்டையில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென கட்டிடம் சரிந்து விழுந்ததால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்ற நிலையில் தண்டையார்பேட்டையில் மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொண்டிருக்கும் போது அருகில் இருந்த கட்டிடம் மற்றும் டீ கடையும் சரிந்து விழுந்தது பொதுமக்கள் மத்தியில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Kaliraj