கொவைட்-19 விவகாரம்… கட்சி நிகழ்ச்சிகளை ஒத்திவைத்து உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் அறிக்கை…

திராவிட முன்னேற்ற கழகட்தின்  பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் க.அன்பழகன் (98) அவர்கள்  கடந்த 7ம் தேதி காலமானார். இவர், கடந்த  1977ம் ஆண்டு முதல், தொடர்ந்து 43 ஆண்டுகள் திராவிட முன்னேற்ற கழகத்தின்  பொது செயலாளராக இருந்து வந்தார்.  இந்நிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தின்  புதிய பொதுச்  செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழு வருகிற 29ம் தேதி கூடும் என்று திமுக தலைவர் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.  இந்நிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தின்  தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பில்,   கடந்த 15ம் தேதி வெளியிட்ட அறிக்கையின் வாயிலாக திமுக பொதுக் குழு கூட்டம் வருகிற 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் பொதுச் செயலாளர் பொறுப்புக்கான தேர்வு  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்கள் வழியாக கோவிட்-19 வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையிலும்- முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வகையிலும்  தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவுரையின் படி, வரும் 29-ம் தேதி நடைபெறவிருந்த கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, விருதுநகர் ஆகிய  மாவட்டங்களில் நடைபெற உள்ள திராவிட முன்னேற்ற கழகத்தின்  நிகழ்ச்சிகள் அனைத்தும் வருகிற 31ம் தேதி வரை ஒத்தி வைத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

author avatar
Kaliraj