டெல்லியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்த சென்னை சூப்பர் கிங்ஸ்..!

சென்னை அணி 19.4 ஓவர் முடிவில் 173 ரன்கள் எடுத்தது 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

ஐபிஎல் தொடரின் முதலாவது தகுதி சுற்று போட்டியில் டெல்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகளும் விளையாடியது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில்நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய டெல்லி அணி தொடக்க வீரர்களான ஷிகர் தவான், பிரித்வி ஷா  களமிறங்க வந்த வேகத்தில் தவான் 7 ரன்களில் வெளியேற, அதிரடியாக விளையாடி வந்த பிரித்வி ஷா 60 ரன்கள் அடித்து அவுட்டானார். இதன்பின் வந்த அக்சர் படேல் 10 ரன்கள், ஸ்ரேயாஸ் ஐயர் 1 ரன் எடுத்து ஆட்டமிழக்க, கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் ஷிம்ரான் ஹெட்மியர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.

சிறப்பாக விளையாடிய ரிஷப் பந்த் 51* ரன்கள் அடித்து களத்தில் கடைசிவரை  இருந்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் டெல்லி 5 விக்கெட் இழந்து 172 ரன்கள்  எடுத்தனர். சென்னையில் ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா, பிராவோ, மொயீன் அலி தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியுள்ளது. சென்னை அணியில் தொடக்க வீரராக ருதுராஜ் ,ஃபாஃப் டு பிளெசிஸ் இருவரும் களமிறங்கினர். இரண்டாவது பந்திலேயே ஃபாஃப் டு பிளெசிஸ் அன்ரிச் நார்ட்ஜேயிடம் போல்டானார்.

பின்னர் ராபின் உத்தப்பா, ருதுராஜ் இருவரும் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர். சிறப்பாக விளையாடி வந்த ராபின் உத்தப்பா அரைசதம் விளாசி 63 ரன்கள் எடுத்தார். அதில் 7 பவுண்டரி 2 சிக்சர்கள் அடங்கும். இதைத்தொடர்ந்து களமிறங்கிய ஷர்துல் தாகூர் வந்த முதல் பந்திலேயே டக் அவுட்டாகி சென்றார். அடுத்து இறங்கிய அம்பத்தி ராயுடு ஒரு ரன் எடுத்து ரன் அவுட்  ஆனார்.

சிறப்பாக விளையாடி வந்த ருதுராஜ் 19வது ஓவரில் அக்சர் படேலிடம் கேட்சை கொடுத்து 70 ரன்னில் வெளியேறினார். கடைசி ஓவரில் 6 பந்தில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில் சென்னை அணியின் கேப்டன் தோனி முதல் இரண்டு பந்தில் பவுண்டரி விளாசினார். பின்னர் அடுத்த பந்தில் வைடு செல்ல அடுத்த பந்தில் மீண்டும் தோனி பவுண்டரி விளாசி அணியை வெற்றி பெற செய்தார். இறுதியாக சென்னை அணி 19.4 ஓவர் முடிவில் 173 ரன்கள் எடுத்தது 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

author avatar
murugan