#Breaking:அதிர்ச்சி சம்பவம்…பள்ளியில் ரிவர்சில் வந்த வேனால் 2 ஆம் வகுப்பு மாணவர் பலி!

சென்னை:வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ரிவர்சில் வந்த வேனால் மாணவர் பலி.

சென்னை,வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ரிவர்சில் வந்த வேனால் மாணவர் பலியான அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

பள்ளி வளாகத்தில் வேன் நின்ற பின்னர் 2 ஆம் வகுப்பு மாணவர் திக்சித் நடந்து சென்றபோது ரிவர்சில் வந்த வேன் மோதி விபத்து ஏற்பட்டதாக முன்னதாக கூறப்பட்ட நிலையில்,தான் தவற விட்ட பொருள் ஒன்றை எடுக்க பள்ளி வேனில் மாணவர் திக்சித் ஏற முயன்றபோது வேன் ரிவர்சில் எடுக்கப்பட்டதால் மாணவர் தவறி விழுந்ததில் அவர்மீது வேன் ஏறியதில் படுகாயம் அடைந்தார்.

இதனையடுத்து,அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில்,செல்லும் வழியிலேயே மாணவர் திக்சித் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இதனைத் தொடர்ந்து,மாணவரின் உயிரிழப்புக்கு காரணமான வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.