சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு.! கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்.!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் மதுரை கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.  

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் அவர்கள் மீது விடுபட்ட கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மதுரை கீழமை நீதிமன்றத்தில் வழக்கு மனு அளிக்கப்பட்டு இருந்தது.

சிபிஐ தாக்கல் செய்த இந்த மனுவானது கீழமை நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சிபிஐ தரப்பு மதுரை உயர்நீதிமன்றதில் கீழமை நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற சிபிஐ மனுவை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை ரத்து செய்து, கீழமை நீதிமன்றமே தேவைப்படும் வழக்கு பிரிவுகளை சேர்க்கலாம். தேவைப்பட்டால் நீக்கலாம் என கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment