விரட்டி விரட்டி வெளுத்த மனைவி.. நீதிமன்றத்தில் கதறிய கணவர்.!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆல்வார் பகுதியை சேர்ந்தவர் அஜித் சிங் யாதவ். இவர், ஹரியானாவில் உள்ள ஒரு அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சுமன் யாதவ். இவர்கள் இருவரும் காதலித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு 7 வயதில் மகன் ஒருவன் இருக்கிறான். ஆரம்பத்தில் அன்பாக இருந்த மனைவி சுமன் கடந்த ஒரு வருடமாகவே சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட கோபப்பட்டு தனது கணவர் அஜித்தை அடிக்க ஆரம்பித்தார்.

கையில் கிடைக்கும் கிரிக்கெட் பேட், பூரிக்கட்டை போன்றவற்றை வைத்து  அஜித்தை அடித்துவிடுவாராம். இந்த நிலையில் வீடு முழுவதும் தனது கணவனை துரத்தி துரத்தி வெளுத்து வாங்கும் வீடியோ கேமராவில் பதிவாகி உள்ளது.  இந்த வீடியோவை அஜித் நீதிமன்றத்தில் காட்டி தன்னை காப்பாற்றும் பட, நீதிபதியிடம் காட்டி கோரிக்கை வைத்துள்ளார்.

அவர் காட்டிய அந்த வீடியோ காட்சியை பார்த்து அதிர்ந்துபோன நீதிபதி அவருக்கு பாதுகாப்பு அளிக்கும்படியும், இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தும் படியும்,  காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.  அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment