குடிநீரில் கழிவுநீர்.! 3 குழந்தைகள் உட்பட 11 பேருக்கு தீவிர சிகிச்சை.!
குடிநீரில் கழிவுநீர்.! 3 குழந்தைகள் உட்பட 11 பேருக்கு தீவிர சிகிச்சை.!
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பகுதியை காரைக்கால் மேடு மீனவ கிராமத்தில் நேற்று இரவு 3 குழந்தைகள் உட்பட 11 பேருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக பதறிப்போன அக்கம் பக்கத்தினர், அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.
விவரம் அறிந்து, அங்கு புதுசேரி சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்தனர். இந்த திடீர் வாந்தி மயக்கம் பற்றி அவர்கள் விசாரித்துள்ளனர். இதற்கிடையில் வாந்தி மயக்கம் ஏற்பட்டவர்களுக்கு காரைக்கால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
பின்னர் மருத்துவ குழு ஆய்வு செய்ததில், முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், காரைக்கால் மேடு கிராமத்தில் விநியோகிக்கப்பட்ட குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாவட்ட நிர்வாகத்தினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.