சந்திரயான்-2 வெற்றி என்பது  செப்டம்பர்  7-ஆம் தேதி தான் தெரியும்- மயில்சாமி அண்ணாதுரை

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவை ஆய்வு செய்வதற்காக ராக்கெட் மூலம் சந்திராயன் விண்கலத்தை கடந்த திங்கள்கிழமை ஏவியது.

இந்த நிலையில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  நிலவிற்கு மனிதன் செல்ல சர்வதேச அளவில் 4 வருடங்களாக ஆய்வு நடைபெற்று வருகிறது. உலகம் அழியும் நிலையில் மனித இனத்தை காப்பாற்றும் இடமாக நிலவு இருக்கும்.சந்திரயான்-2 வெற்றி என்பது  செப்டம்பர்  7-ஆம் தேதி தான் தெரியும் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.