நாளை விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2 விண்கலம்

சந்திராயன் 2 விண்கலம்  நாளை விண்ணில் ஏவப்படுகிறது.

நிலாவில் விண்கலத்தை இறக்கி ஆய்வு நடத்த இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ திட்டமிட்டது.இதனால்  சந்திராயன் 2 ஜி.எஸ்.எல்.வி. மார்க் – 3 ராக்கெட் மூலம் ஜூலை 15 ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில்  ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்தது.ஆனால் அன்று  ஏவப்பட இருந்த  சந்திராயன் 2  தொழிநுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இஸ்ரோ தெரிவித்தது

இதன் பின்  இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில்,ஜூலை 22  ஆம் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு  சந்திராயன் 2  விண்கலம் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது என்று  தெரிவித்தது.இதனையடுத்து நாளை சந்திராயன் 2 விண்கலம்   விண்ணில் ஏவப்படுகிறது.