தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு..!

தென் தமிழகத்தில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று மழைக்கு வாய்ப்பு கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.

சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு ,கடலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது, மேலும் திருவாரூர் நாகை தஞ்சை ராமநாதபுரம் புதுக்கோட்டை நெல்லை ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் சென்னையை பொறுத்த வரை அடுத்த 4 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.