வசந்தகுமார் இறப்பு – கே.எஸ் அழகிரி கண்ணீர் மல்க அஞ்சலி.!

வசந்தகுமார் இறப்பு – கே.எஸ் அழகிரி கண்ணீர் மல்க அஞ்சலி.!

சென்னை தியாகராய நகரில் உள்ள எம்.பி. வசந்தகுமார் உடலிற்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 10-ஆம் தேதி கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமார் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார். இவரின் மறைவிற்கு பிரதமர் உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். வசந்த குமார் இறந்ததற்கு பின் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த சோதனை முடிவில், அவருக்கு நெகட்டிவ் என வந்துள்ளது.

இதையடுத்து, அப்போலோ மருத்துவமனையில் இருந்து காங்கிரஸ் கொடி போர்த்தப்பட்டு ஆம்புலன்சில் மூலம் வசந்தகுமார் எம்.பி உடல் சென்னை தி.நகர் நடராஜன் தெருவில் உள்ள அவரது வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது. தற்போது, பொது மக்கள் அஞ்சலிக்கு வசந்தகுமார் எம்பி உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வசந்தகுமாரின் உடலிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி மறைந்த வசந்தகுமார் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். இவருடன் கட்சி நிர்வாகிகம் மற்றும் உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர். இதையடுத்து, வசந்தகுமாரின் உடல் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்படுகிறது. மதியம் 2 மணிக்கு மேல் சொந்த ஊரான கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்திற்கு கொண்டு செயல்படுகிறது. நாளை காலை 10 மணி அளவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube