ஒரு செம்மறி ஆடு இத்தனை கோடிக்கு விற்பனையானதா? உலகில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட செம்மறி ஆடு!

உலகில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட செம்மறி ஆடு.

ஸ்காட்லாந்து நாட்டில், லானார்க்கில் நேற்று ஆட்டு சந்தை நடைபெற்றது. இந்த ஆட்டு சந்தையில் ஆடுகளின் எடை மற்றும் காரணிகளை அடிப்படையாக கொண்டு வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் ஏலம் எடுப்பார்கள்.

ஸ்காட்டிஷ் தேசிய சந்தை, இந்த சந்தையை நடத்தி வருகிறது. இந்த சந்தையில், இங்கிலாந்தை சேர்ந்த செம்மறி ஆடு ஒன்று பங்கேற்றது. அந்த ஆட்டின் பெயர், ‘டபுள் டைமண்ட்’. இந்நிலையில், இந்த ஆடு இந்திய மதிப்பில், ரூ.3.5 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

மேலும், உலகிலேயே அதிகமான விலைக்கு விற்பனையான ஆடு டபுள் டைமண்ட் தான் என சாதனை படைத்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.